Mar 5, 2015

''அடை மழை பெய்து ஓய்ந்திருந்த வேலை
தெருவெல்லாம் சகதி!
நடை பாதையில் நடை வண்டி கூட
செல்ல முடியாத சங்கதி..!
அன்று என்னவோ தெரியவில்லை
வெகுவாய் வெளுத்துக் - கட்டியது வெயில்.
சன்னலோரம் விழி வைத்து
சுற்றும் சூழ்ந்தேன் - அன்று தான்
தரை தட்டியது நான் விட்ட - காகிதக் கப்பல் ..!!!


           By:-‪#‎RifanPMM‬

Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think

Mar 4, 2015


வெளிக்கிளம்பி வேலைக்கு செல்கையில்
வெளிநாட்டுக்காற்று
தேகத்தை குறுக்கிட்டுச் சொன்னது:
''ஊர்ப்புற வயல் வெட்டையில்
கச்சான்கால காகிதப் பட்டம் விட்ட
நினைவுகளை மீட்டிப் பார் என்று..''
இதயம் மௌனமாய் சலனமானது
கண்ணிரு ஓரங்களில் கண்ணீர் குடி கொண்டது !!!

         

Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think