நிழல் தந்த சோலை வனமே
அனல் போல் வீசுது இங்கே
உன்னுடன் உறவாடிய எந்தன் நாட்கள்
எங்கே..?
பணம் காசைக் கண்டால்
புலி கூட புல்லைத் திங்கும் காலமடா..!
குணம் இழந்து – பெண்ணால்
வாழ்க்கை வழி தேடும் கோலமடா..!
‘’காற்றிடம் கேட்டுப்பார்!’’
அவள் மீது வைத்திருந்த காதலை....!
‘’என் தியாகத்தை கேட்டுப்பார்!’’
அந்த தாஜ்மஹால் கூட
கை தட்டி ஆர்ப்பரிக்கும் என் கூட..!
ஒரு காதலனின் உணர்வு
ஒரு உண்மையான காதலனுகக்கே தெரியும்.
காலம் உணர்த்தும் போது உனக்கு அது
புரியும்.
எப்போதும் என் காதல் – உனக்கு
புரியவில்லை என்றால்...?
உன் காதல் ஜடம் என்றே சொல்வேன்
இவ்வுலகில்.
உலகை சுற்றி வர அதை சாதணை என்கிறார்கள்.
சுற்றுகிறேன் அவள் மனதை வருடங்கள்
ஆறாய்,
கிடைத்தது வேதனை மட்டுமே..
காமத்துக்கு காதல் என்கிறாய்
காசுக்கு கல்யாணம் என்கிறாய்
இரண்டுமே வாழ்வின் சமரசம் என்பதனை
மறந்து...!
!..( ர சி க ன் றி பா ன் )..!
No comments:
Post a Comment
" Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think
;"