Apr 28, 2015

✔சினமாட✔

உன் கண்ணாடி நொஞ்சினிலே
  இக்கல் நெஞ்சக்காரன்
வன் சொல் வீசி உடைத்திருந்தால்
மண்டியிட்டு மன்றாடுகிறேன் மண்ணிக்க...!!
ஒற்றைக் காலில்  நின்றாடுகிறேன் நீ என்முன்னிற்க..!

மணம் கொண்ட மலர் நீ
விருந்தாட வந்தவ ண்டை
வரவேற்க மறுத்து விட்டால்
மறு நொடியே  உயிரின்றி போகாதோ...!
அன்பு  எனும் ஒரு  வார்த்தை  அர்த்தமிழந்து சாகாதோ...!

மௌனம்  தான்  உன் பதிலானால்
மரணம் தான் என் முடிவு...
சற்றேனும்  இதலுன்னி  காதலனே என்றானால்
மறு ஜென்மம் பிறந்தேனும் உன் கரம் பிடிப்பேன்..!

தவறுதலாய்  உரைத்ததினால்
தவமாக கிடக்கிறேன்...
காலமெல்லாம்  கரைகிறது...
சிறைப்பட்ட என் நெஞ்சை
அன்பாலே அவிழ்த்திடுவாய்...

   ஆழ் நோக்கி சிந்தித்து
எடுக்கின்ற  முடிவினைத்தான்
     சரியெனக் கொள்வேன்...
உன் பெயருக்கும் அர்த்தம் அதுவெனச் சொல்வேன்..!

இப்படிக்கு
உறங்காத விழிகள் வலிகளுடன்!!
  ✒Rifan.PMM

 Sonic 


Posted via By #Rifan.PMM

Mar 5, 2015

''அடை மழை பெய்து ஓய்ந்திருந்த வேலை
தெருவெல்லாம் சகதி!
நடை பாதையில் நடை வண்டி கூட
செல்ல முடியாத சங்கதி..!
அன்று என்னவோ தெரியவில்லை
வெகுவாய் வெளுத்துக் - கட்டியது வெயில்.
சன்னலோரம் விழி வைத்து
சுற்றும் சூழ்ந்தேன் - அன்று தான்
தரை தட்டியது நான் விட்ட - காகிதக் கப்பல் ..!!!


           By:-‪#‎RifanPMM‬

Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think

Mar 4, 2015


வெளிக்கிளம்பி வேலைக்கு செல்கையில்
வெளிநாட்டுக்காற்று
தேகத்தை குறுக்கிட்டுச் சொன்னது:
''ஊர்ப்புற வயல் வெட்டையில்
கச்சான்கால காகிதப் பட்டம் விட்ட
நினைவுகளை மீட்டிப் பார் என்று..''
இதயம் மௌனமாய் சலனமானது
கண்ணிரு ஓரங்களில் கண்ணீர் குடி கொண்டது !!!

         

Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think